
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்புக்கு 10 கோடி வெள்ளியில் வீடு நிலம் வெகுமதி யாக வழங்கும் முடிவுக்கு நிதியமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஷப்ருல் உட்பட அமைச்சர்கள் அஸ்மின் அலி, கைரி ஜமாலுடின், துவான் இப்ராஹிம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் இதை உறுதிப்படுத்தவில்லை. 10 கோடி வெள்ளியில் வீடு மற்றும் நிலம் கோரி நஜிப் விண்ணப்பம் செய்திருப்பதாக நேற்று நாடாளுமன்றத்தில் தெங்கு ஷப்ருல் அம்பலப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.



