
2022 பட்ஜெட்டில் மித்ரா மூலம் இந்திய சமுதாயத்திற்கு வெறும் 100 மில்லியன் அதாவது 10 கோடி வெள்ளி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் நஜிப் துன் ரசாக் என்ற தனிமனிதர் வீடு நிலம் மற்றும் சொத்துக்கு 100 மில்லியன் அன்பளிப்பை வழங்க அரசாங்கம் முன் வந்திருக்கிறது. ஆகவே மலாக்கா மாநில இந்தியர்களே! நாளை நடைபெறும் வாக்களிப்பில் சிந்தித்து வாக்களியுங்கள் என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.



