
பக்கத்தான் ஹராப்பான் தலைவர்கள் கட்சியில் உள்ள கருத்திணக்கம் மற்றும் ஒற்றுமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று சிலாங்கூர் கெடிலான் தகவல் பிரிவுத் தலைவர் ஹாலிமி கேட்டுக் கொண்டுள்ளார். டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை நோக்கி விரல் நீட்டி குற்றஞ்சாட்டுவதும் மலாக்கா மாநிலத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்காக அவரை ராஜினாமா செய்ய வற்புறுத்துவதும் பொறுப்பற்ற செயலாகும்.ள மலாக்கா தேர்தல் முடிவு உண்மையில் ஹரப்பானுக்கு பெரிய அடியாகும், ஆனால் எடுக்கப்பட்ட ஒவ்வொரு முடிவும் அனைத்து தலைவர்களுடனும் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலானது. தனிப்பட்ட முடிவுகள் அல்ல. எனவே, ஹராப்பானில் உள்ள எந்தத் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவரின் விருப்பப்படி அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுவது போல் அவரை நோக்கி விரல் நீட்டுவது மிகவும் பொருத்தமற்றது என்று ஹாலிமி சாடினார்.
