
புதிய தொழிலாளர்களை சேர்ப்பதற்கு பெஞ்சானா கெர்ஜெயா என்ற ஊக்கத்தொகை திட்டம் அதன் இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும்.
ஆகவே அது உடனடியாக சீர் செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் மனித வள அமைச்சர் எம். குலசேகரன் கேட்டுக்கொண்டார். பொருளாதாரத்தை மேம்படுத்துவது, அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது இந்த திட்டமாகும்.
நோய் தொற்று காரணமாக பலர் வேலை இல்லாமல் இருக்கும் இந்த நேரத்தில் சொக்சோவால் நிர்வாகிக்கப்படும் இந்தத் திட்டம் அதன் இலக்கை அடைய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
