
விமான பயணக் கட்டணங்களை உடனடியாக குறைக்கும்படி நாட்டிலுள்ள விமான நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் தலையீடின்றி கட்டணக் குறைப்பை விமான நிறுவனங்கள அமல்படுத்த வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்தார். விமானக் கட்டணங்கள் குறிப்பாக சரவா மாநிலத்திற்கு விதிக்கப்படும் கட்டணம் பயணிகளுக்கு சுமையளிப்பதாக உள்ளது. 2022 ஆம் ஆண்டு இறுதி விடுமுறை காலத்தில் சரவா மாநிலத்திற்கு விதிக்கப்படும் அதிகப்படியான கட்டணம் குறித்து பலர் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என்று அவர் சொன்னார்.
