
மலேசிய – சிங்கப்பூர் இடையிலான தரைவழி தடுப்பூசி VTL சிறப்பு வழித்தடம் பயணம் இன்று திறக்கப்பட்டதால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இன்று காலையில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் மற்றும் மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஆகியோர் இந்த தரைவழி தடுப்பூசி பயணத்தை பார்வையிட்டனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தரைவழி பயணத்தில் குடி உரிமை உள்ளவர்கள், நிரந்தர வாசிகள், நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் மலேசியாவிலிருந்து ஒவ்வொரு நாளும் 1,440 பேர் உட்லண்ட்ஸ் கடற்பாலம் வழியாக சிங்கப்பூர் வரலாம் மற்றும் மலேசிய செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
