
வரும் 2022 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தேசிய புலிகள் பாதுகாப்பு மையத்திற்கு மானிய ஒதுக்கீடு இல்லாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. நெகிரி செம்பிலான் ராசா நாடாளுமன்ற உறுப்பினர் சா கீ சின் நேற்று பேசுகையில் ஒவ்வொரு ஆண்டும் 45 லட்சம் வெள்ளி பாண்டா பாதுகாப்புக்காக ஒதுக்கப்படுகிறது. ஆனால் தேசிய புலிகள் பாதுகாப்பு மையத்திற்கு கடந்த ஆண்டு 17 லட்சம் வெள்ளி அதற்கு முந்தைய ஆண்டு பத்து லட்சம் வெள்ளி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு காலியாக உள்ளது. நாம் பாண்டாக்களை பாதுகாக்கிறோம் என்பதை ஒப்புக்கொள்கிறேன், ஆனால் மலேசியாவில் உள்ள மலாயா புலிகளை ஓரங்கட்ட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்..
