
கடந்த தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் பெர்சத்து கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளில் 3 தொகுதிகளை ஜசெக தேர்வு செய்து கொள்ளலாம் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார். ஒரு நாடாளுமன்றம் மற்றும் இரண்டு சட்டமன்ற தொகுதிகளை தற்போது ஜசெக கோரியுள்ளது. தொகுதி ஒதுக்கீடு வெற்றிகரமாக முடிவடையும் வகையில் இதர கட்சிகளுடன் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
