
உலகையே உலுக்கிய வரும் ஒமிக்ரோன் வைரஸ் தொற்று நாட்டில் இதுவரை கண்டறியப்படவில்லை என்று அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டத்தோ டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார். மலேசிய தடுப்பூசி ஆய்வு கழகம் உட்பட ஏழு ஆய்வுக் கழகங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் மூலம் இது தெரிய வருகிறது என்று அவர் சொன்னார். நாட்டில் எல்லைப்புற பகுதிகளில் கோவிட் 19 நோய்த்தொற்றுக்கு எதிராக தனிநபர்களிடம் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.



