
வரும் 2022 பள்ளி தவணையை முன்னிட்டு தமிழ்ப்பள்ளிகளை காக்கும் பொருட்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் படி சிலாங்கூர் மாநில கெஅடிலான் இளைஞர் பிரிவு உதவிச் செயலாளர் தினேஷ் செல்வராஜூ கேட்டுக் கொண்டுள்ளார். முதலாம் ஆண்டு பயிலவிருக்கும் உங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பி தமிழ்ப்பள்ளியை காப்பாற்றுங்கள். பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவது தமிழ் பெற்றோருக்குப் பெருமை தமிழ் நமது இனத்தின் அடையாளம். ஆகவே தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்திற்கு நாம் அனைவரும் ஒளியாய் திகழ்வோம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.



