
பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை வீழ்த்த பெர்சத்து இலக்குக் கொண்டிருக்கிறது என்று தாம் கூறியதாக கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர், வான் சைபுல் கூறியதற்கு முன்னாள் பிரதமர், டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் பதிலடி கொடுத்துள்ளார். இது உண்மையில் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் வரும் 8ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனலின் 42 கோடி வெள்ளி நிதி மோசடிக்கு வழங்கப்படும் தண்டனைக்கு எதிராக செய்யப்பட்ட மேல் முறையீட்டு கவனத்தை திசைத் திரும்பலாம் என்று சைபுல் கூறியுள்ளார். இந்த அவதூறு நஜீப்பிடமிருந்துதான் வந்திருக்கும் என்பதில் எந்த குழப்பமுமில்லை. இதைத்தான் முன்னாள் பிரதமர், டான்ஸ்ரீ மொகிதீன் யாசினை வீழ்த்திய போதும் அனுபவமிக்கவர்கள் பேசினார்கள் என்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தனது முநூலில் சைபுலை சாடியுள்ளார்.



