
நாட்டில், தாய்ப் மொழிப் பள்ளிகளை கட்டம் கட்டமாக ஒழிக்க வேண்டும் என்று பெர்சத்து கட்சி தகவல் பிரிவு தலைவரின் கூற்றை மலேசிய சிறுபான்மை உரிமைகள் கட்சி எனப்படும் மீரா கடுமையாக கண்டிக்கிறது என்று அதன் தலைவர் கே.பி. சாமி தெரிவித்தார். தாய்மொழி பள்ளிகள் காக்கும் விவகாரத்தில் ஒட்டுமொத்த சமுதாயம் தொடர்ந்து குரலங கொடுக்கும். அந்த வகையில் மீரா கட்சியும் தாய்மொழி பள்ளிகள் நிலைத்திருக்க போராடும் என்றார் அவர். அதேசமயம் பெர்சத்து தகவல் பிரிவு தலைவரின் அறிக்கையை ஏன் பெர்சத்துவில் உள்ள இந்தியத் தலைவர்கள் கண்டிக்கவில்லை. இவர்கள் வாயை மூடிக் கொண்டிருப்பது ஏன் என்று கே.பி. சாமி கேள்வியை எழுப்பினார்.



