
தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்திறங்கிய வெளிநாட்டு மாணவர் ஒருவருக்கு ஒமிக்ரோன் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் இன்று தெரிவித்தார். இதன் மூலம் உலகையே உலுக்கிய வரும் ஒமிக்ரோன் வைரஸ் தற்போது மலேசியாவிலும் பதிவாகியுள்ளது என்றார். ஈப்போவில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் 19 வயதுடைய இந்த மாணவர் நவம்பர் 19 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவிலிருந்து சிங்கப்பூர் வந்திருக்கிறார். பின்னர் நேற்று கேஎல்ஐஏ அனைத்துலக விமான நிலையம் வந்து சேர்ந்த போது அவருக்கு ஒமிக்ரோன் வைரஸ் உறுதிபடுத்தப்பட்டதாக அவர் சொன்னார்.



