
கேமரன் மலை சிம்பாங் பூலாயில் சாலையில் நேற்று மாலையில் ஏற்பட்ட மண் சரிவில் இரண்டு வாகனங்கள் புதையுண்டதாக கூறப்படுகிறது. தீயணைப்பு படை வீரர்கள் நேற்றிரவு மேற்கொண்ட மீட்பு பணியில் வெல்பையர் வாகன ஓட்டுநர் சடலத்தை மீட்டு எடுத்தனர். இவர் கிள்ளான் நகரைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டாலும் அவர் அடையாளம் காணப்படவில்லை. இந்த துயர் சம்பவத்தில் இதுவரை இருவர் பலியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு விடிய விடிய மீட்பு பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
