
எஸ்.கே. ரேகா குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் கிஷோர் குமார் கருப்பையாவின் சமுதாய சேவைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மலாக்கா மாநில அரசு அவருக்கு டத்தோ எனும் உயரிய விருதை வழங்கி சிறப்பித்துள்ளது. இந்நாட்டில் ஏழை இந்திய மாணவர்களுக்கு கல்வி நிதியை வழங்கி உதவி புரிந்துள்ளார். மேலும் வியாபார துறைகளில் ஏராளமான இந்திய இளைஞர்களை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார். இந்திய சமுதாயத்திற்கு பல வகைகளில் உதவிகளை வழங்கி இருக்கும் இவரின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் மலாக்கா மாநில அரசு இந்த விருதை வழங்கி சிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
