
சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிக்குள் மட்டும் பிரச்சாரம் செய்வதை கட்டுப்படுத்தும் விதிகளை மறுபரிசீலனை செய்யுமாறு தேர்தல் ஆணையத்தை சரவாக் ஜசெக வலியுறுத்தியுள்ளது. சரவாக் சிபு நாடாளுமன்ற உறுப்பினர் ஆஸ்கார் லிங் கூறுகையில், சிபு தொகுதியில் பல மாநிலத் தொகுதிகள் இருப்பதால், அங்கு பல தொகுதிகளின் வேட்பாளர்களும் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். உதாரணமாக, எங்கள் மார்க்கெட் பவாங் அசான் மாநிலத் தொகுதியில் உள்ளது, சிபுவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்கள் வருகிறார்கள். இந்த சூழலில் வேட்பாளர்கள் அங்கு பிரச்சாரம் செய்ய அனுமதி தர வேண்டும்’என்று அவர் கேட்டுக் கொண்டார்.


