
நாட்டில் 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 90 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றதன் வழி மலேசியா முக்கியமான அடைவு நிலையைப் பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். இளையோரில் 90 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்தியதன் வழி நாம் மகத்தான வெற்றியை பதிவு செய்துள்ளோம். மூத்த குடிமக்களும் தயார் நிலையில் உள்ள தடுப்பூசிகளை விரைந்து செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தனது அகப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
