
1எம்டிபி தொடர்புடைய 114 மில்லியன் பறிமுதல் வழக்கை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. அரசாங்க நிதியில் இருந்து பண மோசடி செய்து இருக்கலாம் என்பதை நிரூபிக்க அரசு தரப்பு தவறியதைத் தொடர்ந்து இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அறிவித்தது.
கோலாலம்பூரில் உள்ள பெவிலியன் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 680 மில்லியன் ரொக்கம் நகைகள் மற்றும் பிற சொத்துக்களில் இந்த 114 மில்லியன் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது
