
வர்த்தக மற்றும் தொழில் துறைகளில் ஈடுபட்டிருக்கும் இந்திய வர்த்தகர்களுக்கு உடனடியாக தடுப்பூசி போடும் பணியை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தகச் சங்கத்தின் தலைவர் டத்தோ ஆர். இராமநாதன் கேட்டுக்கொண்டார். எங்கள் சங்கத்தில் 1,500 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தினசரி வர்த்தகம் தொடர்பில் பலரை சந்திக்கிறார்கள். ஆகவே இவர்களுக்கு சுகாதார பாதுகாப்பு வழங்கும் வகையில் தடுப்பூசி போடப்பட வேண்டும். அனைத்துலக வானிப தொழில்துறை அமைச்சிடம் தடுப்பூசி போடும் பரிந்துரையை முன் வைத்திருக்கிறோம்.
சுகாதார அமைச்சு மற்றும் அனைத்துலக வாணிப தொழில் துறை அமைச்சும் இந்திய தொழில் வர்த்தகர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
