
மக்கள் நடமாட்டம் உத்தரவு காலத்தில் sop விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 10,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மக்கள் இது தொடர்பில் இலவச சட்ட உதவியை நாடலாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக சுங்கை பூலோ, பெட்டாலிங ஜெயா, காஜாங், புக்கிட் லஞ்சான் ஆகிய தொகுதிகளில் முதல் கட்டமாக இந்த இலவச சட்ட உதவி தொடங்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு விதிக்கப்படும் 10,000 வெள்ளி அபராதத்தை குறைப்பது, மேல்முறையீடு செய்வது அல்லது ரத்து செய்வது தொடர்பில் இலவச சட்ட உதவியை நாடலாம் என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல வழக்கறிஞருமான ஆர் சிவராசா கேட்டுக்கொண்டார்.



