28.4 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

சிலாங்கூர் மாநில அரசு சார்பில் 13 சமூக நல இல்லங்களுக்கு 65,000 வெள்ளி நிதியுதவி

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 13 சமூக நல இல்லங்களுக்கு சிலாங்கூர் மாநில அரசு சார்பில் 65,000 வெள்ளி நிதியுதவி வழங்கிப் பட்டுள்ளதாக ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார். அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவது, மருத்துவ சிகிச்சையளிப்பது மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது ஆகிய நோக்கங்களுக்கு பயன்படுத்துவதற்காக அந்நிதி வழங்கப்பட்டது. சம்பந்தப்பட்ட சமூக நல இல்லங்களுக்கு ஆதரவு வழங்கும் விதமாகவும் அந்த இல்லங்களில் தங்கியிருப்போரின் நலனை பாதுகாக்கும் நோக்கிலும் சிலாங்கூர் மாநில அரசு இந்த நிதியுதவி வழங்கி உதவி புரிந்துள்ளது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles