
இந்துகளால் மிகவும் விமரிசையாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்படும் சமயத் திருவிழா தைப்பூசம் ஆகும். இந்துக்கள் மட்டுமின்றி, மற்ற இனங்களும் பல வருடமாக, தைப்பூசத் திருவிழாவில் கலந்து சிறப்பித்து கொண்டுதான் இருக்கிறார்கள். அடுத்த ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி தைப்பூசத திருவிழா கொண்டாடப்படவுள்ளத. Omicron அச்சுறுத்தல் காரணத்தால், முன்மொழியப்பட்ட ‘Sop’கள் தைப்பூச ரதம் ஊர்வலத்தை நடத்த அனுமதிக்காது என்று ஒற்றுமை துறை அமைச்சர் ஹலிமா கூறியுள்ளார். ரத ஊர்வலம் தைப்பூசக் கொண்டாட்டத்தில் முக்கியமான ஒன்றாகும். இது தொன்று தொட்டே தமிழர்களால் நடத்தப்படும் சிறப்பாகும் ரத ஊர்வலம் இல்லையென்றால் அது கொண்டாட்டமே கிடையாது . ஆகையால், முறையான, Sop களுடன் ரத ஊர்வலத்தை நடத்த அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று பெக்கோ சட்ட மன்ற உருப்பினர் டாக்டர் எஸ் இராமகிருஷ்ணன் கேட்டு கொண்டார்.
