
மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் தலைமையிலான மூடா கட்சியை வரும் 14 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சுக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. மேலும் மூடா கட்சிக்கு 10,000 வெள்ளி இழப்பீடு வழங்க முடியும் உள்துறை அமைச்சுக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மூடா கட்சியை ஒரு அரசியல் கட்சியாக அங்கீகரிக்கவேண்டும் என்று செய்துகொள்ளப்பட்ட விண்ணப்பத்தை உள்துறை அமைச்சு மற்றும் பதிவு இலாகா நிராகரித்ததை தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ள சைட் சாடிக் மற்றும் 12 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
