
மேரு சட்டமன்றத் தொகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவைச் சேர்ந்த 20 நோயாளிகள் 5,000 வெள்ளி வரையிலான மருத்துவ உதவியைப் பெற்றனர். நோயாளிகளின் நிதிச்சுமையைக் குறைக்கும் நோக்கில் இவ்வாண்டில் இந்த நிதியுதவி வழங்கப்பட்டதாக மேரு தொகுதி உறுப்பினர் முகமது ஃபக்ருள்ராஸி முகமது மொக்தார் கூறினார் .இந்த பெடுலி சேஹாட் திட்டத்திற்கு 30 நோயாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்தன.எனினும் தகுதியுள்ள 20 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார். மருந்துகள், கட்டில், சக்கர நாற்காலி போன்ற உபகரணங்கள் மற்றும் இதர வகை உதவிகள் இந்திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டன என்றார் அவர்.
