
ஜோகூர் , தங்காக் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் லாக்கப்பில் இருந்து லொங் டைகர் எனப்படும் ரொஹிங்கிய ஆடவன் தப்பியோடிய சம்பவம் தொடர்பில், நான்கு போலீஸ் அதிகாரிகள் விசாரிக்கப்பட்டதாக, ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ அயோப் கான் தெரிவித்தார். ரோஹிங்யா ஆடவன் தப்பியோடிய சம்பவத்திற்கு கவனக்குறைவே முக்கிய காரணமாகும். இதனிடையே, தப்பியோடிய அந்த ஆடவன் மலாக்காவில் தலைமறைவாக இருக்கலாம் என்று நம்பப்படுவதாக அவர் தெரிவித்தார்.
