
சிலாங்கூர் மாநில செந்தோசா சட்டமன்ற தொகுதியில் பி 40 குடும்பங்களைச் சேர்ந்த 5 முதல் 12 வயதுக்கு உட்பட்ட 100 மாணவர்களுக்கு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் பேருதவி புரிந்துள்ளார். அடுத்த ஆண்டில் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு பள்ளி சீருடைகள், காலணிகள், பள்ளி உபகரணங்கள், சைக்கிள், விளையாட்டுப் பொருட்களையும் வழங்கி டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கும் மாணவர்களுக்கும் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தொடர்ந்து உதவி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொகுதி மக்களின் தேவைகளை கேட்டறிந்து உடனடியாக களத்தில் இறங்கி அவர் உதவி புரிந்து வருகிறார். அந்த வகையில் இப்போது வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கும் அவர் உதவி புரிந்திருக்கிறார்.


