
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மூன்று டோஸ் தடுப்பு மருந்து செலுத்த பைசர் திட்டமிட்டு வருகிறது. பைசர் தடுப்பு மருந்து நிறுவனம் தற்போது மூன்றாவது பூஸ்டர் டோஸ் தடுப்பு மருந்தை 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்த திட்டமிட்டு வருகிறது. இதற்கு அமெரிக்காவின் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதி தேவை. தற்போது உலகின் முதன் முறையாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து செலுத்த பைசர் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. அடுத்த ஆண்டுமுதல் ஆறு மாதங்களுக்கு ஐந்து வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்புமருந்து செலுத்த அவசர அனுமதி கோரியுள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்ப ஒரு தடுப்பூசியில் மூன்று மைக்ரோகிராம் தடுப்பு மருந்து மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. ஆறு மாதத் கைக்குழந்தை முதல் 6 வயது குழந்தைகள் வரை இந்த டோஸ் உடலுக்கு எந்த தீங்கும் விளைவிக்காமல் வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் என்று பைசர் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
