
நாட்டில் இரு தினங்களாக பெய்துக் கொண்டிருக்கும் அடைமழையால். சிலாங்கூர், கிளாந்தான், பகாங், திரெங்கானு உட்பட பல மாநிலங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. 50 ஆண்டுகளுக்கு பின்னர் கிள்ளான் வட்டாரம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததுள்ளது. கிள்ளான், காப்பார், பந்திங், போர்ட் கிளாங், அண்டாலாஸ், செந்தோசா ஆகிய இடங்களில் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளந்தானின் குவா முசாங்கில் கனமழையால் வீடுகளில் வெள்ளத்தினால் மக்கள் பரிதவிக்கிறார்கள். பகாங்கில் லிப்பிஸ், ஜெரான்டுட், மாரான் மற்றும் குவாந்தன் ஆகிய இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததுள்ளது. திரெங்கானுவிலும் வெள்ளத்தினால் மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.
