
சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியாக விளங்கும் ஜிபிஎஸ் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தம் 82 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஜசெக மற்றும் பார்ட்டி சரவாக் பெர்சத்து தலா இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. ஜபிஎஸ் மொத்தம் 45 இடங்களில் வாகை சூடியது. ஜிபிஒஸ் கூட்டணியில் இடம் பெற்ற இதர கட்சிகளும் இதர 30 இடங்களில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று காலையில் சரவாக் மாநில ஆளுநர் துன் அப்துல் தாயிப் முன்னிலையில் சரவாக் மாநில முதல்வராக டான்ஸ்ரீ அபாங் ஜோகாரி பதவி ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
