
நாட்டை உலுக்கிய மோசமான வெள்ளத்தினால் ஏழு மாநிலங்களைச் சேர்ந்த 71,000 மக்கள் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
சிலாங்கூர் மாநிலத்தில் 134 நிவாரண மையங்களில் 26,247 பேர் தங்கியுள்ளனர்.
பகாங்கில் 278 மையங்களில் 41,455 பேரும் கோலாலம்பூரில் 350 பேர் தங்கியுள்ளனர். இதில் 287 பேர் லெம்பா பந்தாய் சரஸ்வதி தமிழ்ப்பள்ளி யில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
