
நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தினால் சேதம் அடைந்த அல்லது தொலைத்து போன சாலை போக்குவரத்து ஆவணங்களை பாதிக்கப்பட்டவர்கள் இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் ஓட்டும் லைசென்ஸ், ரோட்டெக்ஸ் எனப்படும் சாலை வரி ஆகியவை தொலைந்து அல்லது சேதம் அடைந்திருந்தால் அது தொடர்பில் போலீஸ் புகார் இருக்கும் பட்சத்தில் இலவசமாக புதுப்பித்துக் கொள்ள முடியும் என்று போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் தெரிவித்தார். வெள்ள துப்புரவு வேலைகள் முடிந்த பின்னர் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த ஆவணங்களை புதுப்பித்து கொள்ளலாம் என்றார் அவர்.
