
சிலாங்கூரில் உள்ள வெள்ள நிவாரண மையங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 29,024 பேர் இன்னமும் தங்கியுள்ளனர் என்று மந்திரி புசார் டத்தோ ’ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது 192 நிவாரண மையங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். “பாதிக்கப்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே வீடு திரும்பத் தொடங்கியுள்ளனர், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்யும் பணியில் சிலாங்கூர் மாநில அரசு நிறுவனங்கள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் நடைபெற்று வருகிறது என்று அவர் சொன்னார்.
