
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரை நாட்டில் 79 தடுப்புக் காவல் கைதிகள் மரணம் அடைந்தனர் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் இன்று அறிவித்தார். இதே காலகட்டத்தில் பல்வேறு வகையான குற்றங்களுக்கு 6 லட்சத்து 6 ஆயிரத்து 664 கைதிகள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். காவலில் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் 20 வழக்குகள் நீதிமன்றத்தில் மரண விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 12 மரண தற்போது விசாரணையில் உள்ளன. 30 மரண சம்பவங்கள் விசாரணை இல்லை என்று அவர் தெரிவித்தார்.
