
நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தினால் சிலாங்கூர் டிங்கில் வட்டாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் டிங்கில் மக்களுக்கு பலர் உதவிகளை வழங்க முன்வந்துள்ளனர். அந்த வகையில் சமூக சேவையில் தன்னலம் கருதாமல் மக்கள் பணியாற்றி வரும் ஸ்ரீ குழந்தை வடிவேலன் இயக்கம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. உலு லங்காட் சுங்கை லீயூ பூர்வீக கிராமம், ஷா ஆலம் பத்து லாப்பான் மற்றும் டிங்கில் வட்டார மக்களுக்கு நேரடியாக களம் இறங்கி ஸ்ரீ குழந்தை வடிவேலன் இயக்கம் உதவிகளை வழங்கியுள்ளது. ஸ்ரீ குழந்தை வடிவேலன் இயக்கத்தின் தலைவர் கலைமாமணி ஆர். பி. கண்ணன் தலைமையில் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

