
நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தினால் பல இடங்களில் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. தற்போது வெள்ளம் வடிந்து விட்டதால் 831 இடங்களில் மின்சார விநியோகம் மீண்டும் வழக்க நிலைக்கே திரும்பி இருப்பதாக தெனாகா நேசனல் தெரிவித்துள்ளது. பகாங்கில் 510 இடங்கள், சிலாங்கூர் மாநிலத்தில் 118 இடங்கள், கோலாலம்பூரில் 25 இடங்கள் மீண்டும் மின்சாரம் வழக்க நிலைக்கு திரும்பி உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
