
சிலாங்கூர், பஹாங், நெகிரி செம்பிலான் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் மலேசிய சோசலிசக் கட்சி பல வகைகளில் திட்டம் வகுத்து வேலை செய்துக் கொண்டிருக்கிறது. சேரும் சகதியும் அண்டி கிடக்கும் நிலையில் அவற்றை தூர் வாரி சுத்தம் செய்வதற்கும், நன்கொடை திரட்டுவதற்கும், பொருள்களை மக்களுக்கு முறையாக சேர்ப்பதற்கும் தனித்தினியே குழு அமைத்து பி.எஸ்.எம் தன் உறுப்பினர்களுடனும் இளைஞர் பிரிவுடனும் வேலை செய்துக் கொண்டிருக்கிறது. பிஎஸ்எம் கட்சியைச் சேர்ந்த செயலாளர் சிவராஜன் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
