
இன்றிரவு 2022 புத்தாண்டு கொண்டாட்டம், விழாக்கள் அனைத்தையும் அரசு ரத்து செய்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்துள்ளார். அதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெறுவதற்காக புத்ராஜெயா பள்ளிவாசலில் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார். இதில் கலந்துகொள்ள முடியாதவர்கள் இதற்கான நேரடி ஒளிபரப்பைக் காணலாம் என்றும் அனைத்து மாநில தலைநகரங்களிலும் உள்ள பள்ளிவாசல்களில் இதேப்போன்ற வழிபாடு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் இஸ்லாம் அல்லாதவர்கள் தத்தம் சமய நெறிப்படி வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யலாம் என்றுஸ பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
