
கோவிட் -19 நோய் தொற்றால் மரணமடையும் நோயாளிகள் சடலங்களை வைப்பதற்கு சுங்கை பூலோ பெரிய மருத்துவமனைக்கு மேலும் ஒரு கொள்கலன் தேவைப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் முதன்மை மருத்துவமனையாக சுங்கை பூலோ பெரிய மருத்துவமனை விளங்குகிறது.
இனி வரும் வாரங்களில் நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வேளையில் மரண எண்ணிக்கையும் கூடலாம் என்று அஞ்சப்படுகிறது. தற்போது சுங்கை பூலோ பெரிய மருத்துவமனை சவக்கிடங்கில் நோயாளிகளின் சடங்குகளை வைப்பதற்கு ஒரு கொள்கலன் வைக்கப்பட்டுள்ளது. மரணம் அடைவோர் எண்ணிக்கை அதிகரித்தால் மேலும் ஒரு கொள்கலன் தேவைப்படும் என்று அதிகாரி ஒருவர் கோடி காட்டியுள்ளார்.
