
நோய் தொற்றால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 2,149 ஆக அதிகரித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் தெரிவித்தார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட பக்காத்தான் அரசாங்கம் ஆட்சியிலிருந்து கவிழ்க்கப்படும் வரை நாட்டில் கோவிட் 19 நோய் தொற்றால் யாரும் மரணம் அடையவில்லை.
அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த பெரிக்காத்தான் நேஷனல் 17 மாத ஆட்சியில் இதுவரை 2,1 49 பேர் மரணம் அடைந்திருப்பது வேதனையாகும். இதுவரை 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டும் மரண எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் ஊரடங்கு அமல்படுத்தியது. ஆனால், நோய்த்தொற்று எண்ணிக்கை குறையவில்லை. தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது என்றார் அவர்.
நாட்டை வழி நடத்துவதற்கு தற்போதைய அரசாங்கத்துக்கு தகுதி இல்லை என்று அவர் சாடினார்.
