
நாட்டில் ஓமிக்ரோன் பரவல் அதிகரித்து வருவதாகவும் இதுவரை 122 பேருக்கு இத்தொற்று பீடித்து இருப்பதாகவும் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் அறிவித்துள்ளார்.
இவற்றில் புதிதாக ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்ட ஐந்து பேரில் நான்கு பேர் சௌதி அரேபியாவில் இருந்து உம்ரா பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பியவர்கள்.
சௌதி அரேபியாவிலிருந்து 39, ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து 7, ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 4, நைஜீரியாவிலிருந்து 2, பிரான்ஸ் மற்றும் கசகஸ்தானில் இருந்து தலா ஒன்று என வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மூலம் இதுவரை 54 ஒமிக்ரோன் தொற்றுச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் கைரி அறிவித்துள்ளார்.
