
சென்னையில் உள்ள திருவான்மியூர் இரயில் நிலையத்தில் மனைவியுடன் சேர்ந்து கொள்ளயடித்துவிட்டு நாடகமாடிய டீக்காராம் என்ற பணியாளர் காவல் துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் வசமாக சிக்கினார். இணைய சுதாட்டத்தில் ஈடுபட்டு, அதனால் நட்டத்திற்கு ஆளான நிலையில் நிறைய கடன்பட்டும் நிலைமை சீராகாததால், தான் பணி புரியும் ரயில் நிலைய பயணச் சீட்டு விற்கும் முனையத்தில் இருந்து பணத்தைத் திருடிவிட்டு களவு போனதாக நாடகமாடி உள்ளார்ர். இவரைக் கட்டிப் போட்டதும் வாயில் துணியைத் திணித்ததும் இவரின் மனைவிதான் என்பதைக் கண்டுபிடித்த காவலர்கள், களவாடப் பணம் மொத்தத்தையும் மீட்டு ரயில் நிருவாகத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
