34.6 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

முதல்வரே முகக்கவசத்தை அணிவித்தார்


தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ள நிலையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பள்ளிகளுக்கு நேரடி வகுப்புக்கள் தடை செய்யப்பட்டு 1 முதல் 8ம் வகுப்பு வரை இணையவழி வகுப்புக்கள் நடத்தப்படுகிறது.
திரையரங்குகள், தங்கும் விடுதிகளில் 50% இருக்கைகள் மட்டுமே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் தண்டம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை சென்னை அண்ணாசாலையில் சென்று கொண்டிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த சிலர் முகக்கவசம் அணியாமல் இருந்ததைப் பார்த்து வாகனத்தை நிறுத்தி அவர்கள் ஒவ்வொருவருக்கும் முகக்கவசத்தை வழங்கினார். அதில் ஒருவருக்கு அவரே முகக்கவசத்தை அணிவித்தார். இதனால் அண்ணாசாலை சற்றுநேரம் பரபரப்புக்குள்ளானது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles