
ஜோகூர் மாநிலம், சிகாமாட் வட்டாரத்தில் செயல்படுகின்ற அரசு தொடர்புடைய ஒரு(ஜிஎல்சி) நிறுவனத்தில் மேலாளராக செயல்பட்ட ஒருவர், ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று விடுதலை செய்யப்பட இருந்தார்.
ஆனால், அந்த 61 வயது முன்னாள் மேலாளர், ஜிஎல்சி நிறுவனச் சட்டத்திற்கு மாறாக 28 மற்றும் 34 வயதுடைய தன் இரு மகன்களுக்கு வெ.50,000 மதிப்புள்ள குத்தகையை வழங்கினார் என்றக் குற்றச்சாட்டின் பெயரில் நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய ஜோகூர் மாநில இயக்குநர் அஸ்மி அலியாஸ் இந்த கைது நடவடிக்கையை உறுதி செய்தார்.
