
தேசிய மீட்புத் திட்டம் 2.0, அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய முழுமையான வரைவுத் திட்டமாக தயாரிக்கப்பட்டு வருவதாக அதன் தலைவர் டான்ஸ்ரீ மஹியாடின் யாசின் தெரிவித்தார். இதில் இடம்பெற வேண்டிய எல்லாக் கூறுகளையும் கவனமாக ஆராய்வதற்காக ஒரு பணிக்குழுவும் நியமிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். எந்தெந்தத் துறைகளில் உடனடி நடவடிக்கைத் தேவைப்படுகிறது; நீண்டகால செயல்திட்டத்திற்கான துறைகள் எவை என்பதை யெல்லாம் இந்தப் பணிக் குழு திர்மானிக்கும். குறிப்பாக, கோவிட்-19 நச்சுயிரி தொடர்பில் புதிய திரள்கள் அதிகரித்தால் அவற்றை கையாள்வதற்கான துரித நடவடிக்கை குறித்தும் இந்தப் பணிக்குழு வரையறை செய்யும் என்று முன்னாள் பிரதமருமான யாசின் தெரிவித்தார்.
