
சீனா, குவாங்சியில், மெதுவான இணைப்பு காரணமாக ஆத்திரமடைந்து இணைய உபகரணங்களை எரித்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லான் என்று மட்டும் அடையாளம் கூறப்பட்ட அவ்வாடவர், கடந்த ஜூன் மாதம் ஓர் உணவகத்தில் இருந்தபோது, இணைய இணைப்பு வேகம் குறைவாக இருந்ததால் ஆத்திரம் அடைந்து இவ்வாறு செயல்பட்டுள்ளர்.. உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த ஃபைபர் நெட்வொர்க் கேபிள்கள் கொண்ட பெட்டியை தீயிட்டு சேதப்படுத்தியதால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
