
மலேசிய இந்து சங்கம் உட்பட அறுவர் தொடுத்துள்ள வழக்கை எதிர்நோக்குவதற்கு பினாங்கு இந்து அறவாரியம் தயாராய் உள்ளது. பினாங்கு மாநில அரசாங்கம் மற்றும் பினாங்கு இந்து அறவாரியத்தின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் குழுவிற்கு மூத்த வழக்கறிஞர் கோபால் ஸ்ரீ ராம் தலைமையேற்பார் என்று பினாங்கு மாநில இரண்டாவது முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமி தெரிவித்தார். கடந்த ஆண்டு கூட்டரசு நீதிமன்றத்தில் ஆலய விவகாரம் தொடர்பாக திவால்துறை தொடுத்த வழக்கில் பினாங்கு இந்து அறவாரியம் வெற்றி பெறுவதற்கு கோபால் ஸ்ரீ ராம் உதவியதையும் டாக்டர் ராமசாமி சுட்டிக்காட்டினார்.
