
போலி கோவிட் தடுப்பூசி சான்றிதழைப் பெற்றதற்காக, பொதுச் சேவை ஊழியர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட மூவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள மறுப்பவர்கள். ஆனால் வேலை அடைவுநிலைக்கான புள்ளிகளை அதிகரிப்பதற்காக, அவர்கள் தங்களது மூத்த ஊழியர் ஒருவர் மூலம் பணம் கொடுத்து அந்த போலி கோவிட் தடுப்பூசி சான்றிதழ்களைப் பெற்றதாக, Alor Gajah மாவட்ட போலீஸ் தலைவர் Arshad Abu தெரிவித்தார்.
