
ஜோகூர் மாநில அரசியலில் நீடிக்கும் நிச்சயமற்ற தன்மை மாநிலத்தின் மேம்பாட்டிற்கு பாதகமாக இறுப்பதால், இதைக் களைய மாநில சட்டமன்றத்திற்கு உடனே புதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அம்னோ ஜோகூர் மாநிலத் தலைவர் நூர் ஜஸ்லான் முகமட் தெரிவித்துள்ளார். மேம்பாட்டுத் திட்டங்கள் முடக்கம், வர்த்தக நடவடிக்கை தேக்கம் என பலவகையிலும் பொருளாதார வளர்ச்சி தேக்கம் கண்டிருப்பதற்கு மாநில அரசின் தள்ளாட்ட நிலைதான் காரனம். இதற்கெல்லாம் நிரந்தரத் தீர்வு நிலையான ஆட்சிதான். அதனால் ஜோகூரில் உடனே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று நூர் தெரிவித்துள்ளார்.
