
பக்தர்கள் 2022 தைப்பூசத் திருவிழா தொடர்பில் விதிக்கப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு விதிமுறைகளால் தங்களின் வேண்டுதலை எளிதாக நிறைவேற்ற முடிந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர். இந்த எஸ்ஓபி விதிமுறைகள் குறித்து ஒரு சில தரப்பினர் அதிருப்தி தெரிவித்தாலும் பால் குடத்தை சுமந்து செல்வதற்கான நேரம் குறைந்தது, நெரிசலில் அகப்படாதது உள்ளிட்ட பலவித அணுகூலத்தால் வழிபாடு சுலபமாக அமைந்தது என அவர்கள் தெரிவித்தனர்.
