
பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கான ஆதரவு நிபந்தனைக்கு உட்பட்டதுதான் என்பதை பெர்சாத்து கட்சி மீண்டும் தேவையின்றி நினைவுறுத்தி இருக்கின்றது.
ஜோகூர் மாநில தேர்தல் தொடர்பான பரப்புரை கூட்டங்களில் இந்த விவகாரம் குறித்து பேசப்படுமென அக்கட்சியின் தகவல் பிரிவு தலைவர் Wan Saiful Wan Jan தெரிவித்தார்.
அம்னோவுடனான அரசியல் பகை முற்றிவரும் இந்த வேளையில், இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை பெர்சாத்து கட்சிதான் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததேத் தவிர அம்னோ அல்ல என்பதை நினைவிற் கொள்ள வேண்டுமென அவர் கூறியுள்ளதன் மூலம், அம்னோவுக்கு மறைமுக நெருக்கடியை பெர்சத்து ஏற்படுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
